Apr 19, 2026 - 09:31 AM -
0
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நபகர் ஒருவர் வீதியிலிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பின்னர் அருகிலிருந்த பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள்ளும் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், தாக்குதலை நடத்திய சந்தேகநபரும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
