Apr 19, 2026 - 07:55 PM -
0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (19) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர மகா நிகாயவின் சங்க தலைமையகத்திற்குச் சென்று, இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
இங்கு, மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து, அனைத்து எதிர்கால நடவடிக்கைகளும் வெற்றியடையவும், வளமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்து ஆசிர்வாதம் வழங்கினர்.
அமரபுர மகா சங்க சபையின் பதில் தலைவர் மாகால்லே நாகித நாயக்க தேரர், பதிவாளர், பலபிட்டியே சிறிசீவலி தேரர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதியுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர்.
