Apr 20, 2026 - 02:03 PM -
0
அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் எதுவுமில்லை, இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று மாலை திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்காக, அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான தூதுக்குழு ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவிருந்தனர்.
கடற்படை முற்றுகை என்று சொல்லப்படுபவை தொடர்வதாலும், போர்நிறுத்த மீறல்கள் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தும் பேச்சுக்கள் காரணமாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் திட்டம் அதிகாரிகளுக்கு இல்லை என ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
