Header Logo

மலையகம்
50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!

Apr 20, 2026 - 02:07 PM -

0

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவல, கேரோலினா பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வட்டவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 9.15 மணியளவில் நீர்கொழும்பு பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற போது, முச்சக்கர வண்டியில் தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளனர். மகள்களில் ஒருவரே வண்டியைச் செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கேரோலினா பகுதியிலுள்ள பெரிய வளைவில், எதிரே வந்த காருக்கு இடமளிக்க முயன்றபோது, முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியைச் செலுத்திய யுவதி, அவரது தாய், தங்கை மற்றும் தந்தை ஆகிய நால்வரும் காயமடைந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!