Apr 23, 2026 - 10:02 AM -
0
ஹிஸ்புல்லா போராளிகளைக் குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், அந்நாட்டின் 50,000-க்கும் மேற்பட்ட வீட்டு தொகுதிகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் தொடங்கி கடந்த 45 நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் 17,756 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதுடன்,
32,668 வீடுகள் சேதமடைந்துள்ளதாக லெபனான் அரசாங்கத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேபோல், போர் ஆரம்பமானது முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களால் 2,400-க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
