Apr 28, 2026 - 10:11 AM -
0
Siam City Cement (Lanka) Ltd) இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. துசித் குணவர்ணசூரிய அவர்களும், தென் மாகாண பிரதான செயலாளரான திரு. சந்திம C.முஹாந்திரம்கே அவர்களும் கௌரவ ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மனவாடு அவர்களின் ஆதரவில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் போது பல முக்கிய அரசாங்க அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.
காலியில் உள்ள Radisson Blu ஹோட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில், உள்ளூராட்சி அமைப்புகள், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை (PRDA), கட்டிடத் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை உள்ளிட்ட அரச நிறுவனங்களைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் கலந்துகொண்டனர். இது தென் மாகாணத்தில் தொழில்துறைத் தரங்களை உயர்த்துவதற்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நவீன அறிவை வழங்குவதற்கும் வலுவான பொது-தனியார் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
மாகாணம் எங்கிலும் உள்ள பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலான இந்த முன்னெடுப்பு, வரும் மாதங்களில் மூன்று (03) தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த அமர்வுகள் SLS 573, தரக் கட்டுப்பாடு, கட்டுமான முகாமைத்துவம், நீர்ப்புகா காப்பு, நீடித்த கொன்கிரீட் மற்றும் கொன்கிரீட் கலவை-வடிவமைப்பு சிறப்பாக்கம் போன்ற முக்கிய பகுதிகளை உள்ளடக்கும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்காலத்திற்காக அறிவார்ந்த வலிமையான கட்டுமானத் துறையை உருவாக்குவோம்.
