Header Logo
Mogo Academy

கிழக்கு
மட்டக்களப்பில் சிறுமியை கடத்த முற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

May 15, 2026 - 11:53 AM -

0

மட்டக்களப்பில் சிறுமியை கடத்த முற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு
Mobitel inner

மட்டக்களப்பு நகரில் 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்த முற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த சிறுமி நேற்றிரவு (14) 7மணியளவில் தமது தந்தையுடன் மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றுக்காக சென்றுள்ளார். 

எனினும் தனியார் வகுப்பு நேற்று இடம்பெறாமை காரணமாக தந்தை மட்டக்களப்பு நகரில் உள்ள தமது உறவினர் வீடொன்றுக்கு அருகில் சிறுமியை விட்டு விட்டு வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த சிறுமி அந்த உறவினர் வீட்டை சென்றடையவில்லை என, அவருடைய தந்தைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சிறுமியின் தந்தை உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். 

கார் ஒன்று வருவதை அவதானித்த சந்தேகநபர், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து தப்பி ஓடியுள்ளார். 

சந்தேகமடைந்த தந்தை அந்த முச்சக்கரவண்டிக்கு அருகில் சென்ற பார்த்த போது, அதில் தமது மகள் மயக்கமுற்ற நிலையில் இருந்ததை அவதானித்துள்ளார். 

உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியை பொறுப்பேற்க வந்த நபர் ஒருவரை பிரதேச மக்கள் இணைந்து மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

அத்துடன் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் வேறு ஒரு இடத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். 

கைதான சந்தேகநபர்கள் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

அந்த பகுதியில் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் சிறுமிகளை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தும் வகையிலான குழுவொன்று செயற்பட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் குறிப்பிடப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara