Header Logo

செய்திகள்
துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பிற பொருட்களுடன் இருவர் கைது

May 17, 2026 - 02:29 PM -

0

துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பிற பொருட்களுடன் இருவர் கைது

தென்னந்தோட்டம் ஒன்றில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் சிறுத்தை தோல், சில துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைத் தங்களது வசம் வைத்திருந்த இரண்டு நபர்கள் வனவிலங்கு திணைக்களத்தின் வனாத்தவில்லுவ உப அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இன்று (17) அதிகாலை வனாத்தவில்லுவ - காட்டுபுளியங்குளம் பகுதியில் வைத்தே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து சிறுத்தை தோல் ஒன்று, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரமற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரமற்ற 12 போர்ட் ரக துப்பாக்கி ஒன்று, 05 உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் 04 வெற்றுத் தோட்டாக் கூடுகள் ஆகியவற்றை வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title