May 17, 2026 - 04:37 PM -
0
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவைக் இலக்கு வைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது கடந்த ஓராண்டு காலத்தில் உக்ரைன் நடத்திய அதிகளவான ட்ரோன் தாக்குதல் என ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல்களில் சுமார் 4 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உக்ரைனுக்குச் சொந்தமான 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதில் இருந்து, கடந்த இரண்டு நாட்களில் கிவ் நகர் மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யாவை பழித்தீர்க்க போவதாக கூறியிருந்தார்.
இத்தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில், ட்ரோன் ஒன்று பறக்கும் காட்சியையும், கரும்புகை எழும்பி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயலும் காட்சியையும் உள்ளடக்கிய வீடியோ ஒன்றையும் உக்ரைன் ஜனாதிபதி ஷெலென்ஸ்கி தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷெலென்ஸ்கி, ரஷ்யா போரை நீடிப்பதற்கும், எங்களது நகரங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் மீது நடத்தும் தாக்குதல்களுக்கும் நாங்கள் வழங்கும் பதிலடிகள் முற்றிலும் நியாயமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
