May 17, 2026 - 05:47 PM -
0
உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரின் சேம்பியன் பட்டத்தை இலங்கை ஆடவர் அணி இன்று (17) தமதாக்கியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், அண்டை நாடான இந்திய அணியை 31-10 என்ற புள்ளிகள் கணக்கில் மிக எளிதாக வீழ்த்தி இலங்கை வீரர்கள் அபார வெற்றி பெற்றனர்.
போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணிக்குக் கடுமையான சவாலை ஏற்படுத்திய இலங்கை அணி, ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 14-05 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
