May 17, 2026 - 09:09 PM -
0
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) பிரதிநிதிகளான இம்ரான் க்வாஜாமற்றும் தேவஜித் சாகியா ஆகியோர் இன்று (17) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் மற்றும் அதன் கட்டமைப்பு மறுசீரமைப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்தப் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவுடன் நேற்று (16) கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
