Header Logo

மலையகம்
மலையக மக்கள் மீதான அடக்குமுறைகளை தடுக்க நடவடிக்கை

May 18, 2026 - 08:01 AM -

0

மலையக மக்கள் மீதான அடக்குமுறைகளை தடுக்க நடவடிக்கை

மலையக மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கப் பிரதீப் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களினால் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக காலத்திற்கும் பதிவாகின்றன. 

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி இரத்தினபுரி நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். 

குறித்த சம்பவம் இடம்பெற்று சுமார் 6 மணித்தியாலயத்திற்குள் 9 பேர் கொண்ட குழுவினரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். 

அதன் பிறகு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக அமைச்சின் ஊடாக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றன 

குறித்த தோட்டத்தில் உள்ள 20 குடும்பங்களுக்கும் காணிகளை வழங்க அந்த பெருந்தோட்ட நிறுவனம் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. 

இம்மாதம் 6ம்திகதி பெரிய மஸ்கெலியா மொக்கா தோட்டப் பகுதியில் தோட்ட முகாமையாளரினால் காவலாளி ஒருவர் தாக்கப்பட்டார். 

அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் டெல்மார் தோட்டத்திலும் அங்குள்ள முகாமையாளரினால் தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டார். 

இவ்வாறு பல சம்பவங்கள் கடந்த காலத்தை போல தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருக்க, எமது அமைச்சின் செயலாளருடன் இனைந்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். 

இதன்மூலம் இவ்வாறான பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

--

Comments
0

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title