Header Logo

செய்திகள்
பாழடைந்த வீடு ஒன்றில் இரத்தக் கறைகளுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

May 20, 2026 - 08:26 AM -

0

பாழடைந்த வீடு ஒன்றில் இரத்தக் கறைகளுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலொன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் ஆவார்.


உயிரிழந்தவரின் சடலத்தின் தலைப் பகுதிக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்படுவதுடன், காலில் வெட்டுக்காயம் என சந்தேகிக்கப்படும் காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மரணமடைந்தவர் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளதுடன், கடந்த மே 18 ஆம் திகதி மாலை தனது சகோதரியின் வீட்டிலிருந்து இந்த பாழடைந்த வீட்டிற்கு வந்துள்ளார்.


அவர் பெரும்பாலான சமயங்களில் இந்த வீட்டிலேயே தங்கியிருந்தமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என்பதால், கொலொன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

title