May 20, 2026 - 10:23 AM -
0
இந்தியாவின் தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தோற்றிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (20) வெளியானது. இதில் 94.31 சதவீத மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் சித்தி பெற்ற விகிதம் அதிவுள்ளது. 4,19,891 மாணவிகளும், 4,01,214 மாணவர்களும் சித்தி அடைந்துள்ளனர்.
மாவட்ட ரீதியான சித்தி பெற்ற சதவீதம்,
புதுக்கோட்டை- 97.57%
சிவகங்கை - 97.54%
தஞ்சை - 97.41%
திருச்சி - 97.31%
கன்னியாகுமரி - 97.30%
பாட ரீதியான சித்தி பெற்ற சதவீதம்,
தமிழ் - 98.43%
ஆங்கிலம் - 99.44%
கணிதம் - 97.36%
அறிவியல் - 98%
சமூக அறிவியல் - 97.93%
