Header Logo

செய்திகள்
இவ்வருடத்தில் 128 காட்டு யானைகள் உயிரிழப்பு

May 21, 2026 - 08:05 AM -

0

 இவ்வருடத்தில் 128 காட்டு யானைகள் உயிரிழப்பு

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

அவற்றில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் 20 காட்டு யானைகளும், மின்சாரம் தாக்கியதால் 15 யானைகளும், ஹக்க பட்டாஸ் உட்கொண்டதால் 10 யானைகளும், விவசாயக் கிணறுகளுக்குள் விழுந்ததால் 05 யானைகளும் உயிரிழந்துள்ளன.

 

இவற்றுக்கு மேலதிகமாக, விஷம் உட்கொண்டமை, ரயில்களில் மோதியமை மற்றும் நீரில் மூழ்கியமை போன்ற விபத்துக்களினாலும் காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

கிழக்கு பிராந்தியத்திலேயே அதிகளவிலான காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் வனஜீவராசி பிராந்தியங்களிலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

 

இது தவிர, காட்டு யானைகளின் தாக்குதல்களினால் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 35 மனித மரணங்களும் பதிவாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

title