Header Logo

செய்திகள்
இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவிற்கு அங்கீகாரம்

May 21, 2026 - 07:11 PM -

0

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவிற்கு அங்கீகாரம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2026 மே 20 ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவிற்காக பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39 (1) ஆம் பிரிவு மற்றும் 2025 மே 21 ஆம் திகதியிட்ட 2437/24 என்ற இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி, நியமிக்கப்பட்டுள்ள புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் பின்வருமாறு: 

கபில விஜேகுணவர்தன – தலைவர் 

அமல் சில்வா – உறுப்பினர் 

பிரெண்டன் குருப்பு – உறுப்பினர் 

வருண வராகொட – உறுப்பினர் 

வெனிசா டி சில்வா – உறுப்பினர் 

இந்த புதிய நியமனங்கள் மூலம் இலங்கை கிரிக்கெட் துறையின் எதிர்காலத் தெரிவு நடவடிக்கைகள் மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் முறைப்படியும் நடைபெறும் என அமைச்சு எதிர்பார்க்கிறது.


MOST READ

காணொளி
காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

பாராளுமன்றில் இன்று...

பாராளுமன்றில் இன்று...

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

title