Header Logo

செய்திகள்
ரூபாயின் வீழ்ச்சி தொடர்பில் அரசை விமர்சிக்கும் ஐ.தே.கட்சி

May 21, 2026 - 10:06 PM -

0

ரூபாயின் வீழ்ச்சி தொடர்பில் அரசை விமர்சிக்கும் ஐ.தே.கட்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கட்டுப்பாடின்றி வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக அரசாங்கம் கடுமையான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, தெளிவான பொருளாதாரத் திட்டம் இல்லாதமை மற்றும் நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிக்க அரசாங்கம் தவறியமை ஆகியவற்றின் காரணமாகவே அமெரிக்க டொலரின் மதிப்பு வேகமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 20 மாதங்களுக்கு முன்பு தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்கும் போது, டொலரின் மதிப்பு 292 ரூபாயாகக் காணப்பட்டது என்பதை ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லத் தவறியதன் காரணமாகவே, தற்போது டொலரின் மதிப்பு 354 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

பாராளுமன்றில் இன்று...

பாராளுமன்றில் இன்று...

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

title