Header Logo

இந்தியா
விஜய்யின் விசேட ஆலோசகராக ஜோன் ஆரோக்கியசாமி நியமனம்

May 22, 2026 - 01:22 PM -

0

விஜய்யின் விசேட ஆலோசகராக ஜோன் ஆரோக்கியசாமி நியமனம்

முதலமைச்சர் விஜய் கடந்த 10-ஆம் திகதி பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் தலைமைச் செயலகம் வந்து பணியாற்றி வருகிறார். 

ஒவ்வொரு துறையாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்கிறார். எந்தெந்த துறைகளுக்கு யார்-யாரை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று ஆலோசித்து முடிவெடுக்கிறார். 

அதன் அடிப்படையில் முக்கியமான பொறுப்புகளுக்கு திறமையான அதிகாரிகளை நியமித்து வருகிறார். 

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தனது விசேட ஆலோசகர்களாக ஜோன் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய 2 பேரை நியமனம் செய்துள்ளார். 

இதில் ஜோன் ஆரோக்கிய சாமி அரசியல் வியூக நிபுணர் ஆவார். தமிழக வெற்றிக்கழகம்தான் ஆட்சியை பிடிக்கும் என்று முன் கூட்டியே கணித்து சொன்னவர். 

இவரை அரசியல் ரீதியான விவகாரங்களுக்கான ஆலோசகராக விஜய் நியமித்துள்ளார். 

இதேபோல் இன்னொரு ஆலோசகரான விஷ்ணு ரெட்டி ஏனைய விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதற்கு முன்பு ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்பவர் முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களுக்கு பின்னர் அவரது நியமனம் மீளப் பெறப்பட்டது. 

இந்த நிலையில் இப்போது ஜோன் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரை சிறப்பு ஆலோசகர்களாக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்துள்ளார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title