Header Logo

உலகம்
காங்கோவில் எபோலா பரவல் தீவிரம்!

May 25, 2026 - 01:53 PM -

0

காங்கோவில் எபோலா பரவல் தீவிரம்!

காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா நோயானது, சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாகும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 

தற்போது எபோலா தடுப்பு நடவடிக்கைகளில் கண்காணிப்பை காங்கோ தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்த நோய்ப் பரவலின் மையமாக விளங்கும் இடுரி மாகாணத்தில், கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் எபோலா அச்சுறுத்தலை மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நோய்களையும் எதிர்கொள்கின்றனர். 

குறிப்பாக, இவர்களில் 20% ஆம் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இதுவரை 101 வழக்குகள் உறுதிசெய்யப்பட்டன. மேலும் 900 இற்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இந்நிலையில் 131 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார மந்திரி சாமுவேல் ரோஜர் கம்பா தெரிவித்துள்ளார். 

இந்நோயின் அச்சுறுத்தலால் காரணமாக மக்கள் யாரும் தாமாக முன் வந்து சிகிச்சையோ பரிசோதனையோ ஏற்பதில்லை. 

ஆதலால் எபோலா தொற்றுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், ஆதரவுப் பராமரிப்பை வழங்குவதற்காக நோய்த்தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிவதும் கடிணமாக உள்ளது என்று டெட்ரோஸ் கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title