May 25, 2026 - 07:05 PM -
0
கதாபாத்திறத்திற்காக தன்னுடைய உயிரையே இழந்த நடிகர் குறித்து தெரியுமா? தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தால் ஏற்பட்ட பாதிப்பு அந்த நடிகரின் உயிரையே குடித்துள்ளது. காமெடி ஜாம்பவன்களான கவுண்டமணி - செந்தில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவர்களுடன் நடித்து கவனத்தை ஈர்த்த நடிகை கருப்பு சுப்பையா தான் அவர்.
1980 - 90 களில் வெளியான பல படங்களில் நடித்த சுப்பையாவை கவுண்டமணி, ஆப்பிரிக்கா அங்கிள் என்று அழைப்பாராம்.
அந்தவகையில் பெரிய மருது படத்தில் கவுண்டமணியும் செந்திலும் ஈயம் பூசும் தொழில் செய்பவர்களாக வருவார்கள்.
அப்போது தன்னிடம் இல்லாத அண்டாவிற்கு ஈயம் பூச எவ்வளவு செலவாகும் என்று கருப்பு சுப்பையா கேட்க, கடுப்பாகும் கவுண்டமணியும் செந்திலும் அவருக்கே ஈயம் பூவிடுவார்கள்.
இக்காட்சியில் நடிக்கும்போது உண்மையில் உடலில் பெயிண்ட் அடித்திருக்கிறார் சுப்பையா. இதனால் அவரது உடலுக்கு பெயிண்ட் சென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாக நடிகர் மனோபாலா தெரிவித்திருந்தார். தன்னுடைய இறுதி காலத்தில் படவாய்ப்புகள் இல்லாமலும், கவனிக்க ஆள் இல்லாமலும் நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக கருப்பு சுப்பையா 2013இல் உயிரிழந்தார் என்று மனோபாலா தெரிவித்துள்ளார்.

