Header Logo

உலகம்
தங்கம் தேடி குகைக்குள் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!

May 29, 2026 - 10:48 AM -

0

தங்கம் தேடி குகைக்குள் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!

லாவோஸ் நாட்டில் தங்கம் தேடி குகைக்குள் சென்று சிக்கியவர்கள் ஒரு வாரத்திற்கு பின் மீட்கப்பட்டனர். 

அந்நாட்டின் Xaisomboun மாகாணத்தில் உள்ள குகைக்குள் தங்கம் தேடி 7 பேர் கடந்த வாரம் சென்றனர். சில மணி நேரத்தில் அந்தப் பகுதியில் கனமழை பெய்து குகைக்குள் இருந்து வெளியே வருவதற்கான பாதையை நீர் சூழ்ந்தது. இதனால் குகைக்குள் சென்றவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அவர்கள் கண்ணீருடன் தங்களை மீட்கக் கோரி வெளியிட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 

இதனையடுத்து லாவோஸ் நாட்டு மீட்புப் படையினர் அவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். தாய்லாந்து நாட்டின் மீட்புப் படையும் அவர்களுடன் இணைந்துகொண்டது. தாய்லாந்து நாட்டில் 2018 ஆம் ஆண்டு 12 பாடசாலை மாணவர்கள் குகைக்குள் சிக்கியபோது அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதில் இந்தக் குழு முக்கிய பங்காற்றி இருந்தது. இவர்களின் முயற்சியால் 7 பேரில் 5 பேர் மீட்கப்பட்டனர். 2 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title