May 30, 2026 - 07:04 PM -
0
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, தெரண ஊடகக் குழுமத்தினால் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இலங்கையின் மிகப்பெரிய தன்சல்’ எனப்படும் தெரண 24 மணித்தியால தன்சல், கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.
இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த தன்சல் நிகழ்வு, நாளை இரவு 7.00 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தெரண ஊடகக் குழுமம், இலங்கை தொழில்முறை சமையற்கலைஞர்கள் சங்கம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து 2024 ஆம் ஆண்டு முதல் இந்த தன்சல் நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றன.
24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த தெரண தன்சல் நிகழ்வில், கடந்த இரு தடவைகளிலும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

