Header Logo

செய்திகள்
சுகாதாரமற்ற தானசாலைகளை கண்டறியும் சுற்றிவளைப்புகள் தொடரும்

May 31, 2026 - 08:46 PM -

0

சுகாதாரமற்ற தானசாலைகளை கண்டறியும் சுற்றிவளைப்புகள் தொடரும்

இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்படும் ‘தன்சல்’ வளாகங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) முன்னெடுத்துள்ளனர். 

இதற்கமைய, மே 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களுக்குள் மாத்திரம் நாடு முழுவதிலும் உள்ள 17,761 தானசாலைகள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தச் சோதனைகளின் போது, சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமலும், பல்வேறு குறைபாடுகளுடனும் நடத்தப்பட்ட 148 தான சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக அந்த தானசாலைகளை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

மாறாக, நிலவும் சுகாதாரக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அதன் அமைப்பாளர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 

அதன்படி, குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்னர் அவற்றை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வெசாக் வாரம் முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தானசாலைகள், வெசாக் வலயங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதால், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்படும் இந்த விசேட சோதனைகள் எதிர்வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title