Jun 1, 2026 - 08:55 AM -
0
கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவான் வயல் பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் பங்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
--

