Jun 1, 2026 - 09:26 AM -
0
கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களின் உறவினர்களை டக்ளஸ் தேவானந்தா நேற்று (31) சந்தித்துள்ளார்.
தொழிலுக்குச் சென்ற மீனவர்களை தேடும் முயற்சிகளில் பலர் ஈடுபட்டிருக்கின்ற போதிலும் இதுவரையில் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலுக்கு போனவர்கள் உரிய நேரத்திற்கு கரை திரும்பவில்லை என்றதும், கடற்படையினரை அனுப்பி தேடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பருத்திதுறை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்களின் வீடுகளுக்கு நேற்று சென்று ஆறுதல் தெரிவித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இவ்வாறான அனர்த்தங்களின் போது, நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து நின்று தான் முன்னெடுத்த நடவடிக்கைகளை, தற்போது தன்னை சந்தித்தவர்கள் நினைவுபடுத்தியதுடன், தற்போதைய நிலை பற்றிய ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
--

