Header Logo

செய்திகள்
வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Jun 1, 2026 - 06:32 PM -

0

வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

வாடகைப் பயணம் செல்வதாகக் கூறி, பிரபல வாடகை வாகன சேவை நிறுவனம் ஒன்றின் காரில் ஏறி, அதன் ஓட்டுநரிடம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர், இன்று (01) கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌஷல்ய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் மேலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். 

அதன்படி, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவரை அடையாள அணிவகுப்பு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். 

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title