Jun 2, 2026 - 04:16 PM -
0
டித்வா அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்து, குடியிருப்பதற்கு வீடற்ற நிலையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளை நிர்மாணிக்கும் வரை தற்காலிகமாக வேறு இடத்தில் தங்கியிருப்பதற்காக வழங்கப்பட்ட வீட்டு வாடகை கொடுப்பனவு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கொடுப்பனவை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்கள் வரை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

