Header Logo

செய்திகள்
முதியோர் இல்லத் துயரம்: தீக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!

Jun 3, 2026 - 10:16 PM -

0

முதியோர் இல்லத் துயரம்: தீக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!

ஹொரணை, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் இன்று (3) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது, அங்கு 72 முதியவர்கள் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட நிவாரணச் சேவையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட கடும் போராட்டத்திற்குப் பின்னர், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இதன்போது, 44 முதியவர்களை எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்பதற்குப் பொலிஸாரும் நிவாரணக் குழுவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

இருப்பினும், இந்தத் தீ விபத்தின் காரணமாகக் காயமடைந்த 8 பேர் உடனடியாக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த வளாகத்தில் இருந்த 11 பேர் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகளின் போது அதில் சிலரது சடலங்கள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title