Header Logo

செய்திகள்
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது

Jun 4, 2026 - 06:19 PM -

0

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது

கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது எட்டு டிங்கி படகுகள், இரண்டு கேனோ படகுகள் மற்றும் ஏழு டிரக்டர்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. 

திருகோணமலை பனிச்சங்கேணி, சோபா தீவு, பொல்மல்குடா, கிண்ணியா, சூடைக்குடா, ஓட்டமாவடி, அளம்பில், புதுமாத்தளன் மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக, கிழக்கு மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளைகளினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் போதே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதானவர்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிரக்டர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் என்பனவற்றையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு, கொட்பே, மூதூர், வாழைச்சேனை, குச்சவெளி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிலும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title