Jun 5, 2026 - 10:00 AM -
0
இந்தியாவின் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் இன்று (05) அதிகாலை எபோலா அறிகுறிகளுடன் 2 பேர் இனங்காணப்பட்டனர். அவர்களை பரிசோதித்த வைத்தியர்கள் ஆரம்பகட்ட அறிகுறிகளின் அடிப்படையில் அவர்களுக்கு எபோலா இருக்கலாம் என சந்தேகித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த சிகிச்சை மற்றும் சிறப்பு கண்காணிப்பிற்காக உடனடியாக காந்தி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கிடையில், நேற்று (04) இதேபோன்ற அறிகுறிகளுடன் மற்றொரு நபரும் காந்தி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.
காந்தி வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் 3 சந்தேக நபர்களும் அதே விமானத்தில் வெளி நாட்டிலிருந்து ஐதராபாத் வந்தடைந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 3 பேரும் ஒரே விமானத்தில் பயணித்தது தெரியவந்ததை அடுத்து, வைத்திய நிபுணர்களும் விமான நிலைய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளின் விவரங்களைச் சேகரிப்பதில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.
ஐதராபாத்தில் எபோலா வைரஸ் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

