Jun 5, 2026 - 05:50 PM -
0
அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயின் திருத்தப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மொரகஸ்முல்ல, இராஜகிரிய, நாவல, ஒபயசேகரபுர மற்றும் கொலன்னாவை நகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் இன்று (05) மாலை 06.00 மணியளவில் வழமைக்குத் திரும்பும்.
காலையில் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக, மேற்கூறிய பகுதிகளில் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

