Jun 14, 2026 - 10:35 AM -
0
பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாக பமுணுகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க, 5 அடி 3 அங்குலம் உயரமுடைய ஒரு ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனது முடியைக் குட்டையாக வெட்டியுள்ளதுடன், பச்சை நிற டி-ஷர்ட் மற்றும் நீலம், வெள்ளை நிறங்கள் கலந்த சாரம் அணிந்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது ராகம வைத்தியசா்லையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பமுணுகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

