Header Logo

விளையாட்டு
ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

Jun 14, 2026 - 04:46 PM -

0

ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (13) தரம்சாலாவில் நடைபெற்றது. 

மழை குறுக்கீடு செய்ததால், போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார். இது அவருடைய 283 ஆவது ஒருநாள் போட்டியாகும். 

அத்துடன் (67 டெஸ்ட், 159 டி20) இது அவருடைய 509 ஆவது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடி ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 559 போட்டிகளில் விளையாடி 2 ஆவது இடத்தில் உள்ளார். எம்.எஸ். தோனி 538 போட்டிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார். 

இதனை தொடர்ந்து, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 24.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக Rahmanullah Gurbaz 102 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Gurnoor Brar மற்றும் Harsh Dubey ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 22.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து, இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் இந்தியா அணி சார்பில் அதிகபட்சமாக அணி தலைவர் Shubman Gill 84 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Ziaur Rahman மற்றும் Rashid Khan ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title