Jun 9, 2026 - 06:30 PM -
0
நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு பரபரப்பாக சென்றுகொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், ரவி மோகன் மற்றும் அவர் தோழி கெனிஷா இருவரும் பிரிந்தது சில வாரங்களுக்கு முன்பு சினிமா துறையில் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதை தொடர்ந்து ஆர்த்தி குடும்பம் பற்றி ரவி மோகன் கண்ணீருடன் அளித்த பேட்டியும் வைரல் ஆனது. நீதிமன்ற உத்தரவை மீறி பேட்டி கொடுத்ததற்காக ரவி மோகன் சமீபத்தில் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
ரவி மோகன் தனக்கும் குழந்தைகளின் ஸ்கூல் பீஸ் கட்ட கூட பணம் தரவில்லை என நீதிமன்றத்தில் ஆர்த்தி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அது பற்றி இரண்டு வாரத்தில் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றது.

