Header Logo
Mogo Academy

வணிகம்
டோக்கியோ சீமெந்து உலக சூழல் தினத்தை முன்னிட்டு பசுமையான இலங்கைக்காக 100,000 கண்டல் தாவரங்களை பயிரிட்டுள்ளது

Jun 16, 2026 - 07:27 AM -

0

டோக்கியோ சீமெந்து உலக சூழல் தினத்தை முன்னிட்டு பசுமையான இலங்கைக்காக 100,000 கண்டல் தாவரங்களை பயிரிட்டுள்ளது
Mobitel inner

டோக்கியோ சீமெந்து கண்டல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் அங்கமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் 100,000 கண்டல் தாவரக் கன்றுகளை பயிரிட்டு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை பூர்த்தி செய்துள்ளது. உலக சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அர்த்தமுள்ள பங்களிப்பை டோக்கியோ சீமெந்து மேற்கொண்டிருந்தது. டோக்கியோ சீமெந்து, இலங்கை கடற்படை, மீன்பிடி சமூகங்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றுக்கிடையே நீண்ட காலமாக பேணப்படும் ஒன்றிணைந்த செயற்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இந்த சாதனை அமைந்திருந்தது. 

2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட டோக்கியோ சீமெந்து கண்டல் தாவர மீளநிறுவல் செயற்திட்டம், திருகோணமலை, சீன குடா பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் கண்டல் தாவரக் கன்றுகள் வளர்ப்பகமொன்றை நிறுவியிருந்தது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்ட எதிர்பார்ப்பு, யுத்தம் காரணமாக அகற்றப்பட்ட சேர்ந்த கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவர வனாந்தரப் பகுதிகளை மீள நிறுவுவதாக அமைந்திருந்தது. பாதுகாப்பு நிபுணர்களின் வழிகாட்டல்களில், டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையை அண்மித்த 20 ஏக்கர் பகுதியில் 17000 க்கும் அதிகமான தாவரக் கன்றுகள் பயிரிடப்பட்டதுடன், இதில் தொழிற்சாலை ஊழியர்கள், கடற்படையினர் மற்றும் பிரதேசத்தின் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

காலப் போக்கில் இந்தத் திட்டம் படிப்படியாக வியாபித்து, இலங்கையின் வடகிழக்கு கரையோரத்தில் நிலைத்திருக்கும் பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்த கன்றுகள் வளர்ப்பகத்தினால் எட்டு விதமான இனங்களில் சுமார் 7500 க்கும் அதிகமான கன்றுகள் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் பிரதான பங்காளராக கடற்படை இணைந்துள்ளதுடன், கிழக்கு, வடக்கு மற்றும் வட கிழக்கு கரையோரப் பகுதிகளில் மீள் செய்கை செயற்பாடுகளுக்கு முக்கிய உதவிகளை வழங்குகின்றது. 

கடற்தொழில், சுற்றுலா மற்றும் உயிரியல் பரம்பல் போன்ற கரையோர வாழ்வாதாரங்களுக்கு கண்டல் தாவர சூழல்கட்டமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. கரையோரப் பகுதிகளை மண் அரிப்பு, வெள்ளப் பெருக்கு மற்றும் புயல் தாக்கங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. எவ்வாறாயினும், அபிவிருத்தி அழுத்தங்கள் மற்றும் சட்ட விரோத குடியேற்றங்கள் போன்றவற்றினால் இந்த சூழல்கட்டமைப்புகள் பெருமளவு இடர்களுக்கு முகங்கொடுத்துள்ளன. இதனால் இலங்கை போன்ற நாடுகளுக்கு அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியமான சூழல்சார் முன்னுரிமையாக அமைந்துள்ளது. 

இந்தத் திட்டம் தொடர்பில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்கான கூட்டாண்மை முகாமையாளர் சலிந்த கந்தபொல கருத்துத் தெரிவிக்கையில், “மீள செய்கை செயற்பாடுகளில், இந்த சூழல்கட்டமைப்பை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். 100,000க்கும் அதிகமான கண்டல் தாவரங்களை பயிரிட்டுள்ளமையானது, இலங்கையின் கரையோரப் பகுதி, உயிரியல் பரம்பல் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தல் போன்றவற்றை பாதுகாப்பதற்கான மேற்கொள்ளப்பட்டுள்ள பெருவாரியான பங்களிப்பாக அமைந்துள்ளது.” என்றார். 

நன்னீர் மற்றும் கடல் நீர் ஆகியன கலக்கும் பகுதிகளில் வாழும் விசேடத்துவம் வாய்ந்த சூழல்கட்டமைப்புகளாக கண்டல் தாவரங்கள் அமைந்துள்ளன. அவற்றின் பரந்து விரிந்த வேர்க் கட்டமைப்புகள், வண்டல் படிவுகளைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலமும் அலைகளின் தாக்கத்தைக் குறைப்பதன் மூலமும் கடற்கரைப் பகுதிகளை நிலைப்படுத்துகின்றன. அதேவேளை, இவை பரந்த அளவிலான தாவர மற்றும் விலங்கினங்களுக்குப் பாதுகாப்பான வாழிடங்களையும் உருவாக்குகின்றன. 

சுனாமி, கடற்கரை அரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கண்டல் தாவரங்களின் அரண் போன்ற பாதுகாப்புப் பெறுமதி நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் செழிப்பாகக் காணப்படும் கண்டல் தாவர வளையங்கள், மனித சமூகங்களுக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்படும் சேதங்களைக் குறைக்கப் பெரிதும் உதவியுள்ளன. அத்துடன், இக்கண்டல் காடுகள் இயற்கையான காற்றுத் தடுப்பான்களாகச் செயல்படுவதுடன், உள்ளூர் சுற்றுச்சூழல் நிலைமைகளைச் சீராகப் பேணுவதற்கும் பங்களிக்கின்றன. 

இச் சூழல்கட்டமைப்புகள் பல மீன் இனங்களின் முக்கியமான இனப்பெருக்க மற்றும் குஞ்சுவளர்ப்புத் தளங்களாகச் செயல்படுகின்றன. அவற்றின் அடர்ந்த வேர்ப் பின்னல்கள், வேட்டையாடும் பிற உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதுடன், செறிவான ஊட்டச்சத்து மூலமாகவும் விளங்குகின்றன. கண்டல் காடுகள் நூற்றுக்கணக்கான வலசைபோகும் பறவையினங்கள், ஊர்வன, இருவாழ்விகள், பாலூட்டிகள், தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் போன்ற உயிரினங்கள் கூடு கட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான தளங்களாக விளங்குவதுடன், பல்லுயிர்ப் பெருக்கத்தின் மிக முக்கியமான களஞ்சியங்களாகவும் திகழ்கின்றன. 

கண்டல் தாவர மறுவளர்ப்புத் திட்டம், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டங்களுக்கும் ஆதரவளித்து வருவதுடன், இலங்கையின் கடற்கரைச் சூழல்கட்டமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றது. சமூகப் பொறுப்புணர்விற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது இத்தகைய உன்னத முயற்சிகள் மூலமாகவே உயிர் பெறுகின்றது. இதன் ஊடாக, நாட்டை, அதன் மக்களை மற்றும் சூழலை வளப்படுத்துவதற்கான தங்களது தொடர்ச்சியான இலக்கின் ஒரு பகுதியாக, சமூக நலனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அவர்கள் தங்களின் நிறுவன விழுமியங்களுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளனர்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara