Jun 22, 2026 - 05:01 PM -
0
உடப்பு, ஆண்டிமுனை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (22) இந்த அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஆண்டிமுனை கடற்கரையில் ஒதுங்கிக்கிடப்பதை மீனவர்கள் கண்டு, அது குறித்து உடப்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலம் தொடர்பாக புத்தளம் குற்றத்தடயவியல் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த அடையாளம் தெரியாத சடலம் ஆண்டிமுனை கடற்கரையில் ஒதுங்கிய போது, அது சேதமடைந்திருந்ததாகவும், உடலின் சில பகுதிகள் அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

