Jun 22, 2026 - 10:15 PM -
0
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டத்திற்குரிய பலன்களை மாத்திரம் நாளை (23) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தக் கொடுப்பனவு 270,025 குடும்பங்களுக்குக் கிடைக்கப்றவுள்ளதாக அந்தச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, 3,287,163,750 ரூபா (மூன்று பில்லியன் இருநூற்று எண்பத்தேழு மில்லியன் இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய்) நாளை (23) உரிய பயனாளிகளின் அஸ்வசும கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளது.

