Header Logo

உலகம்
ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சரமாரி தாக்குதல்!

Jun 23, 2026 - 10:25 AM -

0

ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சரமாரி தாக்குதல்!

உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் கடந்த 2022 பிப்ரவரி 24 ஆம் திகதி அந்நாட்டின் தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய இராணுவம் போர் தொடுத்தது. 

இந்த போர் நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதமாக, உக்ரைன் இராணுவம் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை நோக்கி சுமார் 300 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் இராணுவம் கடந்த 21 ஆம் திகதி தாக்குதலில் ஈடுபட்டது. 

இதில் 59 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மாஸ்கோவின் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. 

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, உக்ரைனின் தெற்கு ஒடெசா பிராந்தியத்தின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனின் ஒடெசா பிராந்திய ஆளுநர் ஓலே கிப்பர் தெரிவித்தார். 

ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒடெசா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயப் பண்ணை முழுவதுமாக சேதமடைந்து, அவசரகால மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


MOST READ

காணொளி
முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்