Jun 24, 2026 - 05:22 PM -
0
இலங்கையில் எண்ணெய் பனை அல்லது ஃபாம் ஒயில் பயிர்ச்செய்கையை அகற்றும் தீர்மானம், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமல்ல, மக்கள் கருத்து மற்றும் சமூக அணுகுமுறைகளின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். இந்த விவாதத்தில் முக்கிய கருப்பொருள் என்னவென்றால், எண்ணெய் பனை பயிர்ச் செய்கை உயிர்ப் பன்முகத்தன்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என்பதாகும். எனினும், கிடைக்கக்கூடிய அறிவியல் சான்றுகளை ஆழமாக ஆராயும்போது, இந்தப் பிரச்சினை பொதுவாக சுட்டிக்காட்டப்படுவது போல் எளிமையானதல்ல என்பது தெரிகிறது.
இலங்கையில் எண்ணெய் பனை பயிரிடப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு, ஏனைய வணிகப் பயிர்ச்செய்கைகளுடன் ஒப்பிடுகையில் அளவில் சிறியது. அது ஏறத்தாழ 11,000 ஹெக்டயர்கள் ஆகும், மேலும் அந்தப் பயிர்ச்செய்கைகள் காடுகளை அழித்து அமைக்கப்படவில்லை, மாறாக பழைய ரப்பர் நிலங்களை எண்ணெய் பனை பயிர்ச் செய்கைக்கு மாற்றுவதன் மூலம் அமைக்கப்பட்டன.

