Header Logo

பல்சுவை
கத்தியால் சக பயணியை குத்திக் கொலை செய்த நபர்!

Jun 24, 2026 - 05:51 PM -

0

கத்தியால் சக பயணியை குத்திக் கொலை செய்த நபர்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (23) இரவு மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சர்ச்கேட்- நல்லசோபரா இடையே பாஸ்ட் லோக்கல் ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் மயங்க் லோஹர் உள்ளிட்ட பயணிகள் முதல் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரயில் கோர்கயான்- கண்டிவாளி இடையே சென்று கொண்டிருந்தது. 

அப்போது ரயில் கதவு திறந்திருந்தது. அருகில் ஒரு பயணி நின்று கொண்டிருந்தார். கதவு திறந்து இருந்ததால் மழைத்துளிகள் ரயிலுக்குள் விழுந்தன. இதனால் சக பயணிகள் கதவு அருகில் நின்ற ஒரு பயணியிடம், கதவை மூடுங்கள் எனக் கேட்டுள்ளனர். 

ஆனால், அந்த நபர் கதவை மூட மறுத்துவிட்டனர். அப்போது பயணிகளுக்கும் அந்த நபருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அந்த நபரை தாக்கியுள்ளனர். 

இதனால் கோபம் அடைந்த அந்த நபர், தனது பேக்கில் இருந்த கத்தியை எடுத்துள்ளார். இதனால் பயணிகள் மிரண்டு போனர். பயணிகள் சுதாரிப்பதற்குள் மயங்க் லோகர் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்க் லோகர் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியை எடுத்து தாக்கும்போது எந்த பயணியும் அவரை தடுத்து நிற்க முயற்சிக்கவில்லை. 

ஆனால், கத்தியால் குத்திய நபரை 7 தனிப்படை அமைத்து பொலிஸார் தேடிவருகின்றனர்.

 


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!