Jun 30, 2026 - 09:06 AM -
0
மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்தியாவிலும் பெட்ரோல், டீசலுக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதனால், பெட்ரோல், டீசல் விற்பனையில் இந்திய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதன்படி, வணிக பயன்பாட்டுகளுக்காக சில்லறை விற்பனை நிலையங்களில் மொத்தமாக பெட்ரோல், டீசல் வாங்க கடந்த 13ம் திகதி முதல் மத்திய இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை 90 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாள் ஒன்றுக்கு ஒரு வாகனத்தின் எரிபொருள் தாங்கியில் 200 லிட்டருக்குமேல் எரிபொருள் நிரப்பக்கூடாது என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த எரிபொருளை மறுவிற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசலை அதிக அளவில் வாங்கி அதை கள்ளச்சந்தையில் விற்பனை தடுக்கும் வகையிலும், தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையிலும் இந்திய மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாளை (01)முதல் நீக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போர் பதற்றம் தணிந்து பெட்ரோல், டீசல் விநியோகம் தடையின்றி இருப்பதால் கட்டுப்பாடுகளை இந்திய மத்திய அரசு நீக்கியுள்ளது.

