Header Logo

சினிமா
அவந்திகாவுக்கு இரண்டு தாலி கட்டிய மாப்பிள்ளை!

Jun 30, 2026 - 11:33 AM -

0

அவந்திகாவுக்கு இரண்டு தாலி கட்டிய மாப்பிள்ளை!

நடிகை அவந்திகா சுந்தருக்கும், காதலர் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் ஜூன் 26 ஆம் திகதி கோவாவில் திருமணம் நல்லபடியாக நடந்தது. திருமணத்தில் மணமகள் அவந்திகாவை தவிர அனைவரும் தங்க நிற உடையில் வந்திருந்தார்கள். மாப்பிள்ளை ஷ்ரவனும் தங்க நிற வேட்டி சட்டை தான் அணிந்திருந்தார். அவந்திகா மட்டும் பிங்க் நிற சேலை கட்டி இருந்தார். 

அவந்திகாவுக்கு ஒன்றல்ல இரண்டு முறை தாலி கட்டினார் ஷர்வன் சீனிவாசன். முதலில் மஞ்சள் கயிற்றால் ஆன தாலியில் மூன்று முடிச்சு போட்டார். அதன் பிறகு தங்கச் செயினால் ஆன தாலியை அவந்திகாவின் கழுத்தில் போட்டார். தாலி கட்டியதும் மாப்பிள்ளையால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். அதை பார்த்த அவந்திகாவோ என்ன மாப்ள என்பது மாதிரி சிரித்தார். உறவினர்களோ ஷ்ரவனை சமாதானம் செய்தார்கள். 

அந்த காதல் திருமணத்தில் அழுதது ஷ்ரவன் சீனிவாசன் மட்டும் அல்ல மணமகளின் அம்மா குஷ்பு சுந்தர் மற்றும் தங்கை அனந்திதாவும் தான். அவந்திகாவும், அனந்திதாவும் ரொம்ப பாசமான சகோதரிகள் ஆவர். இந்நிலையில் தன் அக்காவுக்கு அவர் ஆசைப்பட்டபடி திருமணம் முடிந்த சந்தோஷத்தில் அழுதார் அனந்திதா. மேலும் சந்தோஷமாக இருந்தால் அனந்திதாவுக்கு தானாக கண்ணீர் வந்துவிடும். இதை அவரே சொல்லியிருக்கிறார். 

முன்னதாக விஜய்யை முதல் முறை பார்த்தபோது கூட சந்தோஷத்தில் தான் இரண்டு நிமிடம் அழுததாக தெரிவித்தார் அனந்திதா என்பது குறிப்பிடத்தக்கது. குஷ்புவோ தன் மகள் ஒரு வீட்டு மருமகளான சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார். திருமணம் நடந்த இடத்திற்குள் தன் செல்ல மகன் லியோ சுந்தர் உடன் வந்தார் அவந்திகா. 

தான் ஆசையாக வளர்க்கும் நாய் லியோவை மகனாகவே பார்க்கிறார் அவர். அதனால் தான் மணமேடையில் தன் அருகிலேயே லியோவை அமர வைத்தார். அதை பார்த்த செல்லங்கள் பிரியர்களோ, அவந்திகாவுக்கு ரொம்ப பெரிய மனசு. உறவினருக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் செல்லம் லியோ சுந்தரை அமர வைத்திருக்கிறார். இந்த பெண் ரொம்ப நல்ல பெண் என்றார்கள். 

அவந்திகாவும், ஷ்ரவனும் காதலித்து வந்த நிலையில் கணவன், மனைவி ஆவது என்று முடிவு செய்து தங்களின் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்கள். இரு வீட்டிலும் பச்சைக் கொடி காடி நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். குஷ்பு மீது காதல் வந்துதம் அதை சுந்தர் சி. எப்படி வெளிப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். 

ரொம்ப அன்ரொமான்டிக் ஃபெல்லோ என் கணவர் என குஷ்புவே அந்த ப்ரொபோசல் குறித்து தெரிவித்திருக்கிறார். அன்பே குஷ்பு, ஐ லவ் யூ என்று சொல்லி ரோஜாப்பூ எல்லாம் கொடுக்கவில்லை. ஒரு ஹோட்டல் மாடியில் தண்ணீர் தொட்டி அருகில் நின்ற குஷ்புவை பார்த்து, நாளைக்கு நமக்கு புள்ள பிறந்தா யார் மாதிரி இருக்கும் என கேட்டிருக்கிறார். அது தான் சுந்தர் சி.யின் மாத்தி யோசித்த ப்ரொபோசல். 

மெர்சன்ட் நேவி ஆபீஸர் ஷ்ரவன் சீனிவாசன் அவந்திகாவிடம் எப்படி காதலை வெளிப்படுத்தினார் என்பதை தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்கிடையே பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் அட்டாக்கர் படத்தில் நடிக்கிறார் அவந்திகா. அது தான் அவரின் முதல் தமிழ் படமாகும்.


MOST READ

காணொளி
அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!