Header Logo

பல்சுவை
பெற்றோரையே மரண தண்டனை கேட்க வைத்த பகீர் பின்னணி!

Jun 30, 2026 - 09:32 AM -

0

பெற்றோரையே மரண தண்டனை கேட்க வைத்த பகீர் பின்னணி!

புனேவில் நிச்சயிக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து பெற்ற 1 கோடி ரூபாயை வைத்தே அவரை, தனது காதலன் மூலம் காதலி ஷியா கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18 ஆம் திகதி இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 350 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இக்கொலை தொடர்பாக ஷியாவும், அவரது காதலன் சேதன் சௌத்ரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் அடுத்தடுத்து என பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. ஷியாவும் அவரது கூட்டாளி சேதனும் மிக நுணுக்கமாக கொலையை திட்டமிட்டு, அதை ஒரு விபத்தாக மாற்ற முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவத்தன்று, புனே லோனாவாலாவில் உள்ள லோஹாகட் கோட்டைக்கு சென்று ஷியா மற்றும் கேதனை காதலன் சேதன் சௌத்ரி பின்தொடர்ந்து சென்றுள்ளார். மலை முகடுக்கு அருகில் சென்று காத்திருந்த சேதன், ஷியாவின் சிக்னலுக்காக அங்கு காத்திருந்துள்ளார். ஷியா சிக்னல் கொடுத்தவுடன் கேதன் அகர்வாலை பின்னால் இருந்து காதலன் சேதன் சௌத்ரி தள்ளிவிட்டுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் புதிய தகவலாக தனக்கு நிச்சயிக்கப்பட்ட கேதனை, காதலன் சவுத்ரி மூலம் திட்டமிட்டு லோஹோகட் மலைக்கோட்டைக்கு அழைத்துச் சென்று தள்ளி விட்டு ஷியா கொலை செய்தார். இதில் இருவரும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான முறை தொலைபேசியில் பேசியது உள்ளிட்ட பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இச்சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

திருமணத்திற்கு ஷாப்பிங் செல்ல வேண்டும் எனக் கூறி மணமகனிடம் 1 கோடி ரூபாய் வாங்கிய ஷியா, அதை அவரது கொலைக்கே பயன்படுத்த காதலனுக்கு டிரான்ஸ்பர் செய்ததாக பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் தங்கள் மகளுக்கு மரண தண்டனை தரவேண்டும் என ஷியாவின் பெற்றோரே கூறுமளவிற்கு ஈவு இரக்கமின்றி கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, கைதாகியுள்ள சேத்தன் சவுத்ரி மற்றும் ஷியாவிற்கு விளக்கமறியல் வரும் 3 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!