Header Logo
Mogo Academy

பல்சுவை
திடீர் தலைவலிக்கான காரணங்கள்!

Jul 2, 2026 - 12:52 PM -

0

திடீர் தலைவலிக்கான காரணங்கள்!
Mobitel inner

தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இது மிகவும் பொதுவான பிரச்சினையாகும். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு தலைவலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். 

இன்றைய வாழ்க்கை முறையில் பல்வேறு காரணங்களால் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சில மணி நேரங்கள் நீடிக்கலாம், சிலருக்கு பல நாட்கள் வரை தொடரலாம். எனவே, தலைவலியை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், அதற்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். 

தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள், அதிக வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுவதுடன், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவும் பாதிக்கப்படலாம். இதன் விளைவாக தலைவலி ஏற்படக்கூடும். கோடை காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம். 

வலி நிவாரண மருந்துகளை அதிகமாக உட்கொள்வது, மருந்து காரணமான தலைவலிக்கு (Medication Overuse Headache) வழிவகுக்கும். குறிப்பாக காஃபின் அல்லது சில வகை மருந்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படும்போது, தலைவலி மீண்டும் மீண்டும் ஏற்படலாம். 

உணவை தவிர்ப்பது: மூளை சீராக செயல்பட குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன் அவசியம். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, மூளை வலி உணர்திறன் கொண்ட நரம்புகளைத் தூண்டுவதால் தலைவலி ஏற்படலாம். 

நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட அல்லது புளித்த உணவுகள், வினிகர், சோயா சாஸ், சீஸ் போன்றவற்றில் உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி தலைவலியைத் தூண்டக்கூடும். 

உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் சீராக செயல்பட மெக்னீசியம் சத்து அவசியம். இந்த சத்து குறைவாக இருந்தால் சிலருக்கு தலைவலி, குறிப்பாக ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்), ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம். 

மேலும், உடலில் நீர்ச்சத்து குறைபாடு (நீரிழப்பு) தலைவலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும். இதன் காரணமாக ரத்தத்தின் அளவு குறைந்து, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்படலாம். இதுவே தலைவலியைத் தூண்டக்கூடும். 

தலைவலி அடிக்கடி ஏற்பட்டாலோ, கடுமையாக இருந்தாலோ அல்லது காய்ச்சல், பார்வை மங்குதல், வாந்தி, கை அல்லது கால் பலவீனம் போன்ற அறிகுறிகளுடன் இருந்தாலோ, வைத்தியரை உடனடியாக அணுகுவது அவசியம்.


MOST READ

காணொளி
காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

Mobitel Upahara