Jul 2, 2026 - 03:01 PM -
0
செவ்வாய்க்கிழமை மாலை மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரபல நடிகை நேஹா தூபியா கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது புகைப்படக் கலைஞர்கள் சிலர் அவரை பின்புறத்தில் இருந்து புகைப்படம் எடுப்பதை கவனித்துள்ளார் நேஹா.
உடனே ஷாக்கான நேஹா, புகைப்படக்காரர்களை பார்த்து, மரியாதை குறைவான செயல் என்று கூறியும் இதுபோன்ற புகைப்படங்களை எடுப்பதை நிறுத்துமாறும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
உங்களில் யார் இப்படி அநாகரீகமாக புகைப்படம் எடுக்கிறீர்கள்? யார்? நிறுத்துங்கள். என் புகைப்படத்தை மட்டுமல்ல, யாருடைய புகைப்படத்தையும் இப்படி பின்பக்கத்தில் இருந்து எடுக்காதீர்கள்.
அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, ஒரு பையையோ, புத்தகத்தையோ பிடித்துக்கொண்டு பின்னோக்கி நடப்பது இனி ஏற்றுக்கொள்ள முடியாதது.
இதையெல்லாம் நிறுத்துங்கள், நாங்கள் உங்களிடம் மரியாதையுடன் பேசுவோம், நீங்களும் அதுபோலவே இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார் நேஹா தூபியா.

