Header Logo
Mogo Academy

கிழக்கு
அநுர அரசாங்கத்தில் ஊழலுக்கு இடம் இல்லை!

Jul 3, 2026 - 06:13 PM -

0

அநுர அரசாங்கத்தில் ஊழலுக்கு இடம் இல்லை!
Mobitel inner

பொய்களை கூறுவதில் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைத்தேர்ந்தவர் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றம் சுமத்தியுள்ளார். 

மட்டக்களப்பில் அண்மையில் சேதமடைந்த புதுப்பாலத்தில், தற்காலிக பாலம் ஒன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார். 

அத்துடன் அண்மைய தினங்களிலே சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான பல்​வேறு குற்றச்சாட்டுகள் தற்​போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

​மேலும் அவர் தற்​போது அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கேலிக்கைக்குள்ளாக்குவதாகவும், அவரது செயற்பாடுகள் எப்படிப்பட்டது என மக்கள் நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

அரசாங்கம் விசாரணைகளை சரியான முறையிலே முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், எவ்வித பொய்க் குற்றச்சாட்டுகளை​​யோ அல்லது அரசியல் அழுத்தங்களை​யோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டார். 

அத்துடன் குறித்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எவ்வித ஊழல் சம்பவங்களும் இடம்பெற வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார். 

அதேநேரம், சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட, ஊழல் இல்லாத முறையில் சிறப்பான ஒரு பாலத்தை அமைப்போம் என கந்தசாமி பிரபு உறுதியளித்தார். 

​மேலும் எமது ஆட்சியில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாது என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara