Header Logo

கிழக்கு
அநுர அரசாங்கத்தில் ஊழலுக்கு இடம் இல்லை!

Jul 3, 2026 - 06:13 PM -

0

அநுர அரசாங்கத்தில் ஊழலுக்கு இடம் இல்லை!

பொய்களை கூறுவதில் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைத்தேர்ந்தவர் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றம் சுமத்தியுள்ளார். 

மட்டக்களப்பில் அண்மையில் சேதமடைந்த புதுப்பாலத்தில், தற்காலிக பாலம் ஒன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார். 

அத்துடன் அண்மைய தினங்களிலே சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான பல்​வேறு குற்றச்சாட்டுகள் தற்​போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

​மேலும் அவர் தற்​போது அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கேலிக்கைக்குள்ளாக்குவதாகவும், அவரது செயற்பாடுகள் எப்படிப்பட்டது என மக்கள் நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

அரசாங்கம் விசாரணைகளை சரியான முறையிலே முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், எவ்வித பொய்க் குற்றச்சாட்டுகளை​​யோ அல்லது அரசியல் அழுத்தங்களை​யோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டார். 

அத்துடன் குறித்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எவ்வித ஊழல் சம்பவங்களும் இடம்பெற வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார். 

அதேநேரம், சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட, ஊழல் இல்லாத முறையில் சிறப்பான ஒரு பாலத்தை அமைப்போம் என கந்தசாமி பிரபு உறுதியளித்தார். 

​மேலும் எமது ஆட்சியில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களில் எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாது என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!