Header Logo

செய்திகள்
பாகிஸ்தானில் 80 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் பலி

Jul 3, 2026 - 08:14 PM -

0

பாகிஸ்தானில் 80 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40 பேர் பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி-சோப் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. 

அந்த பேருந்தில் பழுதடைந்த மற்றொரு பேருந்தின் பயணிகள் உள்பட 48 பயணிகள் இருந்தனர். 

டானாசாரில் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 80 அடி பள்ளத்தில் விழுந்தது. 

தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது. 

பேருந்து விபத்தில் பலியானோருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!