Header Logo
Mogo Academy

செய்திகள்
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 27 பேர் கைது

Jul 4, 2026 - 04:08 PM -

0

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 27 பேர் கைது
Mobitel inner

கடந்த ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உள்நாட்டு கடல் பரப்பை உள்ளடக்கியதாக கடற்படையினர் மேற்கொண்ட ​தேடுதலில் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 27 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அவர்களிடம் இருந்த 10 டிங்கி படகுகள் மற்றும் 02 கனோய் படகுகளும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, திருகோணமலை சூடைக்குடா, சுவீட் வே, யாழ்ப்பாணம் உடுத்துறை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, சிலாபத்துறை சவாரிபுரம் ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமேல் கடற்படைக் கட்டளைகளினால் இந்தச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதன்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், வணிக வெடிபொருட்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்கள் மற்றும் மருதங்கேணி பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara