Header Logo

செய்திகள்
டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழப்பா? அமைச்சர் நலிந்த விளக்கம்

Jul 7, 2026 - 05:19 PM -

0

டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழப்பா? அமைச்சர் நலிந்த  விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோய் பரவியதால் சுமார் 40 கைதிகள் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் அளித்துள்ளார். 

இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழந்ததாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறினார். 

இது குறித்து அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

"அது முற்றிலும் பொய்யான ஒரு கதை. 40 பேர் இறந்திருந்தால் அதற்கான உடல்கள் இருக்க வேண்டுமே? எந்தவொரு நோயாளிக்கும் தேவையான சிகிச்சைகள் அங்கு உள்ளன. யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால், (கடந்த நாட்களில்) சிலருக்கு காய்ச்சல் இருந்தது. அதற்கு முந்தைய நாள் அவ்வாறு ஒருவரே பதிவாகியிருந்தார், அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. வைத்தியர்கள் அல்லது சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை. சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க முடியாவிட்டால், அதற்கு அருகிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள். அதுதான் எங்களது நடைமுறையாகும்." என்றார்.


MOST READ

காணொளி
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி