Header Logo

செய்திகள்
கொழும்பில் மேலும் பல பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

Jul 3, 2026 - 02:54 PM -

0

கொழும்பில் மேலும் பல பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் மேலும் சில பிரதேசங்களுக்கு நாளை (04) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நாளை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, மொரட்டுவை, ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

இதற்கு முன்னர் நீர் வழங்கல் சபை வெளியிட்ட அறிவிப்பில், கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகள் மற்றும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹானை, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவை, ஐ.டி.எச் (IDH), கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, கடுவலை, மஹரகம, பொரலஸ்குமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களுக்கு நாளை காலை 9.00 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, இந்த அனைத்துப் பிரதேசங்களுக்கும் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. 

மின்சார விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதனாலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!